பக்கங்கள்

21 டிசம்பர் 2011

எம்மை அச்சுறுத்தி அடிபணிய வைக்க முடியாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அச்சுறுத்தி, அடிபணியச் செய்து தீர்வைத் திணிப்பதற்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச முயற்சிக்கின்றார்.
ஆனால் அந்த முயற்சிக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
வரவுசெலவுத் திட்ட விவாதத்தின் இறுதி நாளான இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“சிறிலங்கா அரசாங்கம் முழு நாட்டையுமே சிங்கள, பௌத்த, இராணுவ மயமாக்குவதற்கு முயற்சிக்கிறது.
முழு நாட்டையுமே நாம் ஆள வேண்டும் என்று கேட்கவில்லை. எமது பிரதேசத்தில் சுயநிர்ணய உரிமையுடன் வாழவே நாம் விரும்புகின்றோம்.
அத்தகையதொரு நிலை தோற்றுவிக்கப்படாது போனால், எம்மை நாமே ஆள்வதற்காக நாங்கள் போராடுவோம்.“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
அத்துடன் கிழக்கில் ஒன்பது உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை பிற்போட்டுள்ளதற்கும் மாவை சேனாதிராசா சிறிலங்கா அரசு மீது குற்றம்சாட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.