பக்கங்கள்

18 டிசம்பர் 2011

ஒழுக்கம் கெட்ட பாராளுமன்றை சரி செய்ய தெரிவுக்குழு.

நாடாளுமன்றத்தின் இறைமை, மரபு, ஒழுக்கம் என்பவற்றை உறுதிப்படுத்தும் வகையில் பரிந்துரைகளை வழங்குவதற்கும், கண்காணிப்பதற்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
21-11-2011 அன்று நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்த வேளையில் உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதம் நாடாளுமன்றத்தின் கறை படிந்த வரலாறாகி விட்டது.
எதிர்காலத்திலும் இப்படியான அசம்பாவிதங்கள் இடம் பெறுவதைத் தடுக்கும் வகையில் சகல கட்சிகளையும் உள்ளடக்கிய நாடாளுமன்றத் தெரிவுக் குழு ஒன்று அமைக்கப்படும் என்று சபாநாயகர் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதற்கமைய அமைச்சர் டி.யூ. குணசேகர தலைமையில் அமைச்சர்களான பி.தயந்தன, அநுரபிரிய தர்ஷன யாப்பா, ரவூப்ஹக்கீம் மற்றும் கருஜயசூரிய, விஜய தாசராஜ பக்ஷ, இரா. சம்பந்தன் ஆகியோர் உள்ளடங்கிய நாடாளுமன்றத் தெரிவுக்குழு சபாநாயகரால் நியமிக்கப்பட்டுள்ளது. பிரதி சபாநாயகர் நேற்று நாடாளுமன்றத்தில் அதன் விவரங்களை அறிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.