பக்கங்கள்

24 டிசம்பர் 2011

ஐ.நாவிடமிருந்து ராஜபக்சவை பாதுகாக்கவே ஆணைக்குழு முயன்றுள்ளது.

சிறிலங்கா அரசின் நல்லிணக்க ஆணைக்குழு ஐ.நாவுக்கு எதிராக ராஜபக்சவைப் பாதுகாக்கும் நோக்கில் செயற்பட்டுள்ளதாக ஏசியன் நியூஸ் இணையத்தளம் விமர்சித்துள்ளது.
நல்லிணக்க ஆணைக்ழுவின் அறிக்கை தொடர்பாக ஏசியன் நியூஸ் இணைத்தளத்துக்கு கருத்து வெளியிட்டுள்ள, கொழும்பு மறைமாவட்ட முதல்வர் வணபிதா றெய்ட் செல்டன், இந்த அறிக்கை இனப்பிரச்சினையை நீடிப்பதற்கு உதவுமே தவிர, தீர்ப்பதற்கு உதவாது“ என்று தெரிவித்துள்ளார்.
“சிறிலங்காவில் நீதி மீள்நிலைப்படுத்தப்பட வேண்டும், அதாவது சட்டத்தின் ஆட்சி ஏற்படுத்தப்பட வேண்டும், வடக்கு,கிழக்கில் இருந்து படைகள் விலக்கப்பட வேண்டும், காவல்துறையில் தமிழர்கள் இணைக்கப்பட வேண்டும்“என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை ஏசியன் நியூஸ் இணையத்துக்கு கருத்து வெளியிட்டுள்ள மனித உரிமைகள் ஆர்வலர் ஜெகான் பெரேரா,
“அனைத்துலக மனிதஉரிமைகள் நிலைப்பாட்டில் இருந்த பார்க்கும்போது, சிறிலங்கா எதிர்கொண்டுள்ள மிக முக்கியமான பிரச்சினை மனிதஉரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்கு சிறிலங்கா அரச தலைமையே பொறுப்பேற்க வேண்டும் என்பதாக உள்ளது.
ஆனால், சிறிலங்கா அரசோ, போருக்கான அடிப்படைக் காரணத்துக்குப் பதிலளித்தல், நல்லாட்சி விவகாரம் ஆகியவற்றையே முக்கியமானவையாக கருதுகிறது.
இந்த குறைகளுக்கு பதிலளிக்கப்படாமல் தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண முடியாது. இது துரதிஸ்டவசமானது.“ என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.