பக்கங்கள்

12 டிசம்பர் 2011

காவலூரில் சிங்களப்படையை சேர்ந்த ஒருவன் சடலமாக மீட்பு.

விடுமுறையை முடித்துக் கொண்டு நேற்றுக் கடமைக்கு திரும்பிய படையினன் தூக்கில் தொங்திய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று ஊர்காவற்றுறையில் இடம்பெற்றுள்ளது.
தம்புள்ளயைச் சேர்ந்த 21 அகவையுடைய ரணசிங்க என்பவரே மேற்படிச் சம்பவத்தில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
கடந்த 23 ஆம் திததி தனது சொந்த இடத்திற்கு விடுமுறையில் சென்ற அவர் நேற்று கடமைக்கு திரும்பியுள்ளார்.கடமைக்கு சென்ற அவர் நேற்று இரவே தூக்கு மாட்டி இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.எனினும் மேற்படி படையினனின் மரணம் தொடர்பாக படையினர் எதுவித காரணங்களையும் தெரிவிக்கமறுத்துள்ளனர். உடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.