பக்கங்கள்

10 டிசம்பர் 2011

பொது மக்கள் உயிரிழப்பு தொடர்பான கேள்விக்கு பதிலளிக்காத நவநீதம்பிள்ளை.

குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டுமென நவனீதம்பிள்ளை மீண்டும் வலியுறுத்தியுள்ளார் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை ஆணையாளர் நவனீதம்பிள்ளை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்படும் வரையில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளும் திட்டத்தை ஒத்தி வைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.இன்னர் சிற்றி பிரஸ் ஊடகம் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கையும், ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கையும் மனித உரிமைப் பேரவையில் விவாதிக்கப்படுவதனை தாம் விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஏற்பட்ட பொது மக்கள் உயிர்ச் சேதங்கள் பற்றி எழுப்பிய கேள்விகளுக்கு, நவனீதம்பிள்ளை பதிலளிக்க மறுத்துவிட்டார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் பதவிக்காக இரண்டாது தடவையாக போட்டியிடும் திட்டம் தொடர்பான கேள்விக்கும் அவர் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.