பக்கங்கள்

13 டிசம்பர் 2011

தமிழரை கொலை செய்த பிரித்தானியர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

பிள்ளைகள் கண்காணிப்பு காணொளிப் பதிவு கருவியில் பார்த்துக் கொண்டிருந்த போதே, கடை உரிமையாளரான அவர்களின் தந்தையை கொலை செய்த நான்கு பிரித்தானிய இளைஞர்களுக்கு நீண்டகாலச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சுப்பையா தர்மசீலன் என்ற 48 வயதான, கடை உரிமையாளர் கடந்த ஆண்டு நவம்பர் 27ம் நாள் குத்தியும் வெட்டியும், உதைத்தும் கொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்தத் கொலையைச் செய்த நான்கு பிரித்தானியர்களுக்கும் பேர்மிங்ஹாம் நீதிமன்றம் 20 தொடக்கம் 27 ஆண்டுகள் வரையில் சிறைத் தண்டனை வழங்கியுள்ளது.
மற்றொருவருக்கு ஆறு ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் இடம்பெற்றதை தர்மசீலனின் நான்கு பிள்ளைகளும் கடையின் மேல் மாடியில் உள்ள கண்காணிப்பு காணொளி பதிவுக் கருவியின் மூலம் பார்த்திருந்தனர்.
4 வயதுக்கும் 14 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த நான்கு பிள்ளைகளும் அதுகுறித்து தொலைபேசி மூலம் தகவல் கொடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.