பக்கங்கள்

24 டிசம்பர் 2011

அடக்குமுறை அரசுக்கெதிராக மாணவர்கள் மாபெரும் பேரணி!

மாணவர்களை அடக்கி ஒடுக்கும் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சகல பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து கொழும்பு நோக்கி பேரணி ஒன்றை நடத்தவுள்ளதாக அணைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் இன்று தெரிவித்தது.
30 மாணவர் சங்கங்களை அரசாங்கம் இடை நிறுத்தியுள்ளது. இது ஒரு ஜனநாயக நாடென்றால் நாம் எமது கருத்தை வெளிப்படுத்த அனுமதிக்கப்பட்டிருப்போம். ஆனால் இது ஜனநாயக நாடு அல்ல' என அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளத்தின் ஏற்பாட்டாளர் சஞ்சீவ பண்டார கூறினார்.
எமது கருத்தை வெளிப்படுத்தவும் அடிப்படை உரிமைகளை அனுபவிக்கவும் எமக்கு சங்கம் தேவையில்லை. அரசாங்கத்தை எதிர்த்த பல மாணவர்கள் பயமுறுத்தப்படுகின்றனர்' என பண்டார கூறினார்.
அடுத்த வருடம் நாட்டின் கல்வி முறைமை முற்றாக மாறிவிடும். தனியார் கல்வி சட்டம் அமுலாகியவுடன் இலங்கையில் இலவச கல்வி முறை அழியத் தொடங்கும். பல்கலைக்கழக கல்வி விவசாயிகளின் தொழிலாளிகளின் பிள்ளைகளுக்கு கட்டுப்படியாகாத விடயமாகிவிடும். பிள்ளையின் கல்வித்தகைமை பல்கலைக்கழக அனுமதியை தீர்மானிக்காது. ஒருவரிடம் எவ்வளவு பணம் உள்ளது என்பதைப் பொறுத்தே பல்கலைக்கழத்தில் இடம் கிடைக்கும்.
முடியுமாயின் அரசாங்கம் எம்மை தடுத்துப்பார்க்கட்டும். நாம் பொலிஸுக்கும் இராணுவத்துக்கும் சவால் விடுக்கின்றோம். அவர்களால் எம்மை தடுத்து நிறுத்த முடியாது. அரசாங்கம் பல்கலைக்கழக விடயங்களில் தலையிட நாம் அனுமதிக்க மாட்டோம்' என அவர் கூறினார்.
இதேவேளை பேராதனையிலிருந்து கொழும்புக்கு பேரணி நடத்தும் திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. அடுத்த வாரம் நாம் இதை நடத்தவுள்ளோம்' என பேராதனை பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் மகேஷ் பிரபாஷ்வர லங்கா கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.