பக்கங்கள்

22 டிசம்பர் 2011

நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் விசாரணைகள் இடம்பெற வேண்டும்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் முக்கியமான குற்றச்சாட்டுக்கள் குறித்து உரிய விசாரணை முடிவுகள் தரப்படவில்லை என்று கனடா தெரிவித்துள்ளது. எனினும் ஆணைக்குழு அறிக்கையில் மேற்கொண்டுள்ள பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கனேடிய உயர்ஸ்தானிகர் Bruce Levy கோரியுள்ளார்.
இறுதிப்போரின் போது இடம்பெற்றதாக சர்வதேசம் சுமத்தி வரும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து ஆணைக்குழுவின் அறிக்கையில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை. அது அறிக்கையின் பாரியகுறைபாடாக உள்ளது.
எனவே குறித்த சம்பவங்கள் தொடர்பில் ஆணைக்குழுவினால் பரிந்துரைகளை மேற்கொண்டிருக்க முடியும் என்றும் Bruce Levy கருத்து வெளியிட்டுள்ளார். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை, இலங்கையின் நல்லிணக்கத்துக்கு வழிவகுக்கவேண்டும்.
எனினும் அறிக்கையை பார்க்கும் போது இலங்கைப்படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது தெரிகிறது. எனவே ஆணைக்குழுவின் அறிக்கைக்கு உரிய மதிப்பை அரசாங்கம் கொடுக்கவேண்டும்.
அதேநேரம் முக்கிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்கம் ஆணைக்குழு உரிய விசாரணைகளை மேற்கொண்டு அதனை வெளிப்படுத்தும் போதே இலங்கையில் நீண்டகால சமாதானத்துக்கு அது அத்திவாரமாக அமையும் என்றும் Bruce Levy சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.