பக்கங்கள்

11 டிசம்பர் 2011

கொக்குவிலில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு!

யாழ்ப்பாணம் கொக்குவில் பொற்பதிப் பிள்ளையார் கோவிலுக்கு கிழக்கு பக்கமாக உள்ள காணி ஒன்றில் இருந்து நேற்றையதினம் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் மனித எழும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பல வருடங்களாக துப்பரவு செய்யப்படாத காணி ஒன்றில் இருந்து இந்த மனித எழும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இவற்றை அவதானிக்கும் போது கடந்த 2 வருடங்களுக்கு முந்தியதாக இருக்கும் எனவும் கோப்பாய் பொலிஸின் தடவையியல் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த மனித எழும்புக் கூடுகள் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த எழும்புக் கூடுகளில் இரு மனித மண்டை ஓடு மற்றும் கை , கால் நெஞ்சுப் பகுதிகளும் உள்ளடங்குவதாக தெரிவித்துள்ள பொலிஸார் அவற்றை பை ஒன்றில் சுற்றப்பட்டு யாழ்.போதனா வைத்தியேசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.