பக்கங்கள்

30 டிசம்பர் 2011

ஒரு லட்சத்து 42 ஆயிரம் பேர் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதி.

இவ்வாண்டுக்கான கல்விப்பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்டையில் ஒரு லட்சத்து 42 ஆயிரம் பேர் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அநுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சித்தியடைந்தவர்களில் 3 ஆயிரத்து 687 பேர் மூன்று பாடங்களிலும் 'A" தர சித்திகளை பெற்றுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இந்தப் பரீட்சையில் பாடசாலை ரீதியில் இரண்டு இலட்சத்து 3 ஆயிரத்து 823 பேரும் தனிப்பட்ட முறையில் 35 ஆயிரத்து 801 பேருமாக மொத்தம் 2 லட்சத்து 39 ஆயிரத்து 624 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.
சித்தி பெற்றோரின் அடிப்படையில், விஞ்ஞான பிரிவில் 422 பேரும், கணித பிரிவில் 310 பேரும், வணிக பிரிவில் 800 பேரும், கலைப் பிரிவில் 2 ஆயிரத்து 146 பேரும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பிரிவில் 2 பேரும் மூன்று பாடங்களிலும் 'A" தர சித்திகளை பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.