பக்கங்கள்

27 டிசம்பர் 2011

மல்லாகத்தில் இளம்பெண் கிணற்றில் வீழ்ந்து மரணம்!

மல்லாகத்தில் இளம் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மல்லாகம் பழம் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக உள்ள வீட்டின் கிணற்றிலிருந்தே இவர் சடலமாக இன்று காலை மீட்கப்பட்டுள்ளார்.
கிணற்றில் நீர் அள்ளச்சென்ற வேளையிலேயே இவர் தவறுதலாக கிணற்றில் வீழ்ந்து மரணமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான விசாரணைகளை தெல்லிப்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.