பக்கங்கள்

15 டிசம்பர் 2011

சுமந்திரனை கட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும்.

தமிழ்த் தேசிய நாடாளுமன்றத்திற்கு மக்களின் ஆதரவு இல்லாமல் தேர்வு செய்யப்பட்ட திரு.சுமந்திரன் தொடர்ந்தும் தமிழர்களுக்கு எதிரான செயற்பாட்டினை செய்து வருகின்றார்.
ஏற்கனவே இலண்டனில் நடந்த கூட்டத்தில் புலம்பெயர் மக்களின் செயற்பாடுகளை மோசமாக விமர்சித்து புலம்பெயர் மக்களின் எதிர்ப்பை சம்பாதித்தவர், இப்போது பேரினவாதியோடு மட்டையாட்டம் ஆடி தமிழர்களின் இரத்தத்தை பேரினவாதி மகிந்தவுடன் பகிர்ந்துள்ளார்.
உலகம் முழுவதும் இளையோர்கள் சிங்கள அணியின் மட்டையாட்டத்தை புறக்கணிக்க இவர் அவர்களுடன் ஆடியது உலகத் தமிழர்களை பெரும் அவமானத்திற்குள் தள்ளியுள்ளது. திரு.சுமந்திரன் பொறுப்போடு தமிழர்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும், இல்லாவிட்டால் த.தே.கூட்டமைப்பு அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்.
த.தே.கூட்டமைப்பு பொறுப்பற்றவர்களையும், சிங்களத்திடம் கொஞ்சி விளையாடுபவர்களையும் ஒதிக்கி வைக்க வேண்டு என்பதோடு திரு.சுமந்திரனுக்கு எமது கடுமையான கண்டனத்தையும் தெரிவிக்கின்றோம்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இது தொடர்பாக சுமந்திரனிடன் விளக்கம் கோர வேண்டும் எனவும் கூட்டடைப்பின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பாக மௌனம் சாதிப்பது அவர்கள் மீதும் சந்தேகத்தைத் தோற்றுவிப்பதாகவும் தமிழீழ புரட்சிகர மாணவர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.