பக்கங்கள்

22 டிசம்பர் 2011

காணி,காவல்துறை அதிகாரங்கள் வழங்க முடியாது"கெகலிய.

இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வு விடயம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் இவ்வித பிரயோசனமும் இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்குமாறு அவர்கள் கோருவதாகவும் அவ்வாறு வழங்க அரசாங்கம் ஒருபோதும் இணங்காது எனவும் அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.
இருந்தபோதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு கோருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கம் அவற்றை வழங்க முன்வராது என்பதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்துவது காலத்தை கடத்தும் செயல் என கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.
இந்தியாவை எடுத்துக் கொண்டால் சோனியா காந்தி வேறு மாநிலங்களுக்குச் செல்ல வேண்டுமாயின் மாநில ஆட்சியாளரிடம் அனுமதி கோர வேண்டி இருப்பதாகவும் அவ்வாறு இருக்க இலங்கை மக்கள் விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.