பக்கங்கள்

29 டிசம்பர் 2011

இலங்கையின் கொலைக்களம்"ஆவணப்படத்தை பான் கீ மூன் பார்த்தாராம்.

இலங்கை இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து பிரித்தானியாவில் சனல் 4 தொலைக்காட்சி தயாரித்த இலங்கையின் கொலைக்களம் என்ற ஆவணப்படத்தை ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் பார்வையிட்டுள்ளதாக ஐ.நா செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் உறுதி செய்துள்ளார்.
இன்னர் சிட்டி பிரஸ் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஐ.நா செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மார்ட்டின் நெசர்க்கி இவ்வாறு தெரிவித்துள்ளார். பான் கீ மூன் இலங்கையின் கொலைக்களம் காணொளியை பார்த்தாரா? இல்லையா? என்பதற்கு ஆம் அல்லது இல்லை என்பதையாவது குறிப்பிடுமாறு நேற்று (28) மின்னஞ்சல் மூலம் இன்ன சிட்டி பிரஸ் மார்டின் நெசர்க்கியிடம் கேள்வி எழுப்பியிருந்தது.
இக்கேள்விக்கு நான்கு மணித்தியாலங்கள் கழித்து பதிலளித்துள்ள மார்ட்டின், ஆம் என கூறியுள்ளதாக இன்ன சிட்டி பிரஸ் தெரிவித்துள்ளது. இதேவேளை, இலங்கையின் கொலைக்களம் காணொளியை பான் கீ மூன் எப்போது பார்வையிட்டார். அது தொடர்பாக அவரின் நிலைப்பாடு என்ன என்றும் இன்ன சிட்டி பிரஸ் மின்னஞ்சல் மூலம் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கைகள் தொடர்கிறது. நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையும் பான் கீ மூன் ஆராய்கிறார். பின்னர் இது குறித்தும் கருத்துக்கள் வெளியிடப்படும். என மார்டின் நெசர்கி அக்கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.