பக்கங்கள்

20 டிசம்பர் 2011

கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டார் அன்ரனி ராஜா!

திரைப்பட இறக்குமதியாளரும் விநியோகஸ்தருமான வேலுபிள்ளை அன்ரனி ராஜா, இனந்தெரியாதோர் சிலரால் காலணி நாடா (லேஸ்) ஒன்றினால் கழுத்து நெரிக்கப்பட்டே படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன – தெரிவித்துள்ளார்.கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போதே அவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.
பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள வீட்டில் தனது குடும்பத்தினருடன் வசித்து வரும் அந்தனி ராஜா, மட்டக்குளி, காக்கைதீவு பகுதியிலுள்ள தனது மற்றுமொரு வீட்டின் திருத்தப் பணிகளைப் பார்வையிடுவதற்காகச் சென்றிருந்த போதே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இந்த கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முகத்துவாரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். சடலம் பிரேத பரிசோதனைகளை அடுத்து உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.