பக்கங்கள்

12 டிசம்பர் 2011

அரசாங்கம் நிராகரிக்கவில்லை என்கிறார் சுமந்திரன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த கலந்துரையாடல் ஆவணத்தை சிறிலங்கா அரசாங்கம் முற்றாக நிராகரிக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
“மூன்று விடயங்களில் சில பிரச்சினைகள் உள்ளதாக மட்டுமே சிறிலங்கா அரசதரப்பு சுட்டிக்காட்டியுள்ளது. வடக்கு,கிழக்கை இணைப்பது அதில் ஒன்று.
காவல்துறை அதிகாரங்களை பகிர்வதற்கும் அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால் சமூக காவல்துறை பற்றி அவர்கள் பரிந்துரைத்தனர்.
சமூக காவல்துறையை உருவாக்குவது பற்றிய அவர்களின் எண்ணப்பாடு குறித்து நாம் கலந்துரையாட வேண்டியுள்ளது.
காணி அதிகாரங்களைப் பகிர்வதற்கும் அரசாங்கம் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால் மாகாணசபைகளில் காணிகள் விரயம் செய்யப்படுவது ஒரு பிரச்சினையாக உள்ளது.
குறிப்பட்ட வழியில் அதை ஏன் செய்ய வேண்டும் என்று நாங்கள் விபரித்து கூறியுள்ளோம்.
எமது கலந்துரையாடல் ஆவணத்துடன் அரசாங்கம் ஏன் இணைங்கவில்லை என்பகு குறித்த காரணத்தை விளக்குமாறு கேட்டுள்ளோம். அதன் பின்னர் கலந்துரையாடல்களைத் தொடர முடியும்.“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.