பக்கங்கள்

22 டிசம்பர் 2011

பசிலின் ஆணவப்பேச்சுக்கு சம்பந்தன் பதிலடி.

கோப்புகளைத் தூக்கிக் கொண்டு தங்களின் பின்னால் திரிகின்ற ஒத்துழைப்பையா பசில் ராஜபக்ச எதிர்பார்க்கிறார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சிறிலங்கா அரசுடன் ஒத்துழைத்துச் செயற்பட வேண்டும் என்று சிறிலங்கா அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்த கருத்துத் தொடர்பாகவே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
“தீர்வுப் பேச்சு உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் சிறிலங்கா அரசுடன் ஒத்துழைத்தே செயற்பட்டு வருகிறோம்.
இப்போது அமைச்சர் பசில் ராஜபக்ச கூறுகின்ற ஒத்துழைப்பு எந்த அடிப்படையைக் கொண்டது? கோப்புகளைத் தூக்கிக்கொண்டு அமைச்சுகளைப் பெற்று, உங்கள் பின்னால் நிற்பதையா எதிர்பார்க்கிறீர்கள்?
தீர்வுப் பேச்சின் போது, நாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பிலான எமது நிலைப்பாட்டை எடுத்துச் சொல்லி விட்டோம்.
பேச்சுக்களின் போது பொறுமையாக, சிறிலங்கா அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியே வருகிறோம்.
அவர்கள் கூறும் ஒத்துழைப்பு எந்த அடிப்படையிலானது என்று கேட்க விரும்புகிறேன்.
கோப்புகளைத் தூக்கிக் கொண்டு அமைச்சுகளைப் பெற்று தங்களின் பின்னால் நிற்பதையா அவர்கள் எதிர்பார்க்கின்றனர்?“ என்று இரா.சம்பந்தன் கேள்வி எழுப்பினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.