பக்கங்கள்

16 டிசம்பர் 2011

கடத்தப்பட்ட லலித்குமார் சித்திரவதை முகாமில் வைத்து கொல்லப்பட்டாரா!?

ஜே.வி.பியின் முன்னாள் மாவட்ட அமைப்பாளரும் மக்கள் போராட்ட இயக்கத்தின் யாழ் மாவட்ட அமைப்பாளருமான வீரராஜ் லலித்குமார் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளை யாழ்ப்பாணம் அச்சுவேலிப் பகுதியில் மீட்டுள்ளதாக மக்கள் போராட்ட இயக்கம் அறிவித்துள்ளது.
காணாமல் போனவர்களை மீட்கும் போராட்டத்தை நடத்தி விட்டு பத்திரிகைகாளர் மாநாட்டை நடத்த புறப்பட்ட வேளையில் இவர் காணாமல் போயிருந்தார். பல்வேறு அச்சுறுத்தல்களின் மத்தியில் லலித் கட்சிப் பணிகளை யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் மேற்க்கொண்டு வந்தார்.
இவருடன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முருகானந்தம் குகன் என்ற கட்சி ஆதரவாளர் ஒருவரும் சென்றமை குறிப்பிடத்தக்கது.
வடக்கு உயர்பாதுகாப்பு வலயப்பகுதியினுள் இயங்கி வருவதாக கூறப்படும் விசேட சித்திரவதை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கலாம்?
கடத்தப்பட்ட மக்கள் போராட்ட இயக்க உறுப்பினர்கள் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயப்பகுதியினுள் இயங்கி வருவதாக கூறப்படும் விசேட சித்திரவதை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கலாமென சந்தேகம் எழுந்துள்ளது. வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயப்பகுதியின் நுழை வாயிற்பகுதியாக உள்ள அச்சுவேலிப்பகுதியினில் கடத்தபட்ட உறுப்பினர்கள் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதையடுத்தே இச்சந்தேகம் எழுந்துள்ளதாக மக்கள் போராட்ட இயக்க தரப்புகள் கூறுகின்றன.
கடத்தப்பட்ட மக்கள் போராட்ட இயக்க யாழ்மாவட்ட அமைப்பாளரான லலித்குமார் வீரராஜ் பல தடைவ படை அதிகாரிகளால் நேரடியாகவே அச்சுறுத்தப்பட்டிருந்தார். இவ்வாறான அரியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் கொல்லப்படுவாயெனவும் காணாமல் போகவேண்டியிருக்குமெனவும் மிரட்டப்பட்டதாக இத்தரப்புகள் மேலும் கூறுகின்றன. உயர்பாதுகாப்பு வலய நுழை வாயிலில் இராணுவ பொலிஸார் கடமையினில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் கடத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் சகிதம் அவர்களை உள்ளே கொண்டு செல்வது சிரமமாக இருந்திருக்கலாம். இதனாலேயே உயர்காதுகாப்பு வலய எல்லையான அச்சுவேலியில் அதனை கைவிட்டு சென்றிருக்கலாமென அவர்கள் சந்தேகம் கொண்டுள்ளனர்.
கடந்த காலங்களில் தமிழ் இளைஞர் யுவதிகள் கடத்தப்பட்ட பாணியிலேயே இக்கடத்தலும் நடந்துள்ளதை அவர்கள் நினைவு கூருகின்றனர்.கடத்தல் நடந்த பின்னர் ஆவரங்கால் பகுதிகளெங்கும் படை அதிகாரிகள் இரவு பகலாக நடமாடியதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நன்றி – உலகத்தமிழ் செய்திகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.