பக்கங்கள்

08 டிசம்பர் 2011

மங்களநேசன் ஈ.பி.டி.பியில் இருந்து நீக்கம்.

ஈபிடிபி கட்சியின் உறுப்பினரும் யாழ்.மாநகர சபை உறுப்பினருமான மனுவல் மங்கள நேசன் தமது கட்சியின் கொள்கைகளுக்கு விரோதமான முறையிலும் அநாகரிகமான முறையிலும் நடந்து கொண்டதற்காக அவரை ஈபிடிபியிலிருந்து தற்காலிகமாக இடை நிறுத்துவதாக ஈபிடிபி கட்சியின் உயர்மட்டம் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈபிடிபி தலைமை செயலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் ஈபிடிபியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கமலேந்திரன் இதனை ஊடகவியலாளர்களுக்கு அறிவித்துள்ளார்.
மனுவல் மங்கள நேசன் என்பவர் பெண்கள் விடயத்தில் அநாகரிகமாக முறையில் நடந்து கொண்டமையினாலும் மதுவின் பிடியில் இருப்பதன் காரணமாகவும் கட்சியிலிருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதோடு அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் கமலேந்திரன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.