பக்கங்கள்

15 டிசம்பர் 2011

யாழில் மாணவன் ஒருவர் காணாமல் போயுள்ளார்!

யாழ். நகரில் நேற்று புதன்கிழமை மாலை 4 மணியளவில் பிரபல வர்த்தகரின் மகன் காணாமல் போயுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரியில் க.பொ.த உயர்தரத்தில் கல்வி பயிலும் பாடசாலை மாணவன் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். அத்தியடியைச் சேர்ந்த, பாக்கியராசா தனுஜன் என்ற 18 வயது மாணவனே காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். நகரப்பகுதியில் அமைந்துள்ள தனது தந்தையின் வியாபார நிலையத்தில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த சமயம் அருகில் இருந்த உணவகத்திற்கு சாப்பிடச் சென்ற குறித்த மாணவன் நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை என யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தங்களது மகனைக் கண்டுபிடித்துத் தருமாறும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.