பக்கங்கள்

30 ஜூன் 2010

தென்னிந்திய திரைப்படத் துறையின் போராட்டங்களுக்கு அஞ்சப்போவதில்லை.-சல்மான் கான்.


'ரெடி' திரைப்படத்துக்கான படப்பிடிப்பு இலங்கையில் நடைபெறுவதற்கு எதிராக தென்னிந்திய திரைப்படத் துறையினர் எடுக்கும் போராட்ட நடவடிக்கைகள் குறித்து நான் கவலைப்படப் போவதில்லை என வட இந்திய சினிமா நட்சத்திரம் சல்மான்கான் தெரிவித்தார். சல்மான்கான் மற்றும் தென்னிந்திய நடிகை அசின் ஆகியோரடங்கிய குழு, 'ரெடி' திரைப்படத்துக்கான படப்பிடிப்பை இலங்கையில் ஆரம்பித்துள்ளன. இது தொடர்பான ஊடகவியலாளர் மாநாடு இன்று கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இடம்பெற்றது. ஊடகவியலாளர் மாநாட்டில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவாறு தெரிவித்தார்.இதில் கலந்து கொண்ட நடிகர் சல்மானிடம் ஊடகவியலாளர் ஒருவர்," தென்னிந்தியாவில் முன்னெடுக்கப்படும் எதிர்ப்புப் போராட்டங்கள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?" என்று கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில், "நான் ஒரு நடிகன், அரசியல்வாதியல்ல. 'ரெடி' திரைப்படத்துக்கான படப்பிடிப்பு இலங்கையில் நடைபெறுவதற்கு எதிராக தென்னிந்திய திரைப்படத் துறையினர் எடுக்கும் போராட்ட நடவடிக்கைகள் குறித்து நான் கவலைப்படப் போவதில்லை. இந்த விடயம் தொடர்பில் நான் இதுவரை எதுவித பிரச்சினையையும் எதிர்நோக்கவில்லை. குறித்த திரைப்படத்தினை தென்னிந்தியாவில் திரையிடுவதிலும் எந்தப் பிரச்சினையும் ஏற்பட மாட்டாது. படத்தின் ஒருசில காட்சிகள் மொரிஷியஸ் தீவுகளில் நடத்தப்பட்டாலும், அநேகமான காட்சிகள் இலங்கையிலேயே எடுக்கப்படவுள்ளன" எனத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.