பக்கங்கள்

03 ஜூன் 2010

தமிழீழம் அழியாது,அழியவிடமாட்டோம்!வைக்கோ.


தமிழ் ஈழம் அழியாது. அழிய விடமாட்டோம். மீண்டும் எழும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசினார்.உலகத்தமிழர் பேரமைப்பு சார்பில் ஈகத்தூண்கள் அடிக்கல் நாட்டு விழா தஞ்சையில் நடைபெற்றது. விழாவில் முள்ளிவாய்க்கால் மக்களுக்கான நினைவுத்தூணை, உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அடிக்கல் நாட்டினார். ஈழத்தமிழர்களுக்காகத் தீக்குளித்த தியாகிகளுக்கான நினைவுத்தூணை இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசியக்குழு உறுப்பினர் நல்லக்கண்ணு அடிக்கல் நாட்டினார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில், தமிழ் ஈழம் அழியாது. அழிய விடமாட்டோம். மீண்டும் எழும். பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் முள்ளிவாய்க்கால் பகுதியில் படுகொலை செய்யப்பட்டனர். மரண ஓலம், வீரம் கலந்தது முள்ளி வாய்க்கால். இது இளைய தலைமுறையினருக்கு எடுத்துரைக்கப்பட வேண்டும். ஈழ விடுதலை வரலாறு, இந்தியா செய்த துரோகம், உலக நாடுகளின் மவுனம் இவை அனைத்தும் எடுத்துச்சொல்லப்பட வேண்டும். முள்ளி வாய்க்கால் முடிவல்ல. தொடக்கம் தான். முள்ளி வாய்க்கால் படுகொலையின் ஆதாரங்கள் நினைவு மண்டபமான அருங்காட்சியகத்தில் இடம்பெற வேண்டும். இந்த நினைவுத்தூண்கள் மலரஞ்சலி, புகழஞ்சலி செலுத்த மட்டும் அல்ல. அவர்கள் எதற்காக மடிந்தார்கள் என்ற உணர்வை ஏற்படுத்ததான். வரலாற்றில் தமிழ் ஈழ வரலாறு இடம் பெற வேண்டும். இளைஞர்கள், மாணவர்கள் தமிழ் ஈழவரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும். ஈழத்தமிழர்களுக்கு எதிரான போரில் மனித உரிமைக்கு எதிரான அனைத்தையும் நடத்தியது இலங்கை அரசு. ஈழத்தமிழர்களை காக்க நாம் 9 கோடி தமிழர்கள் உள்ளோம். அங்கு தமிழ் ஈழம் மலரும். சிங்களர்களை பழிக்குப்பழி வாங்கி அந்த வெற்றித்தூணை தஞ்சையில் நிறுவும் காலம் வரும். ஈழத்தமிழர்களை படுகொலை செய்ய உதவிய இந்திய அரசுக்கு மன்னிப்பு கிடையாது. அங்கு தமிழ் ஈழம் மலரும். அதற்கான போராட்டத்தை பிரபாகரனே தலைமை ஏற்று வழி நடத்துவார் என்றார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசியக்குழு உறுப்பினர் நல்லக்கண்ணு பேசும் போது, 21 ம் நூற்றாண்டில் உலகெங்கிலும் நடைபெறாத கொடூரமான இனப்படுகொலை இலங்கையில் நடந்துள்ளது. இதனை செய்த ராஜபக்சேவுக்கு உரிய தண்டனை கிடைக்கவில்லை. ஈழத்தில் நடந்தது மனிதகுல பிரச்சினை. அதை ஆதரிக்கக்கூடிய எந்த அரசையும் கம்யூனிஸ்டு கட்சி ஆதரிக்க முடியாது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் நடந்த கொடுமையை விட ராஜபக்சே அதிக கொடுமை செய்துள்ளார். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.