பக்கங்கள்

13 ஜூன் 2010

இலங்கை போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகள் தேவை.-ஐரோப்பிய ஒன்றியம்.




சிறிலங்காவில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், அது தொடர்பில் ஐ.நா செயலாளர் நாயகம் அமைக்கவுள்ள ஆலோசனைக்குழுவுக்கு தாம் முழு ஆதரவுகளை வழங்க உள்ளதாகவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் விடுத்துள்ள அறிக்கையில் சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்துள்ளன.
ஸ்பெயின், பிரான்ஸ், சுவிற்சலாந்து மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகள் கூட்டாக இந்த கோரிக்கையை விடுத்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தின் தலமைப்பொறுப்பை தற்போது ஸ்பெயின் கொண்டுள்ளது.
சிறீலங்கா மீதான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் பிரான்ஸ் மிகவும் தீவிரமாக உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த முடிவு சிறிலங்கா அரசு மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்ததையே காட்டுகின்றது.
ஐ.நாவின் செயலாளர் நாயகம் ஆலோசனைக்குழு அமைக்கும் திட்டத்தை தாமதமின்றி முன்னெடுக்க வேண்டும் என பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் ஜெனீவாவில் அழுத்தமாக விடுத்துள்ள அறிக்கை சிறிலங்கா அரசுக்கு பலத்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.