பக்கங்கள்

18 ஜூன் 2010

கருணாநிதியோ ஜெயலலிதாவோ தமிழுக்காக எதையும் செய்யவில்லை.


உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்க கோரிக்கை விடுத்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகின்றன.
சென்னையில் 5 வழக்கறிஞர்கள் இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
5 வழக்கறிஞர்களையும் இன்று மாலை 6 மணிக்கு நாம் தமிழர் கட்சி தலைமைஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான்,
’’இந்த போராட்டத்திற்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன். நாம் தமிழர் கட்சி சார்பில் ஆதரவு தெரிவிக்கவில்லை. தமிழன் என்ற முறையில் ஆதரவு தெரிவிக்கிறேன்.
இந்த போராட்டம் வழக்கறிஞர்கள் போராட்டமாக அல்லாமல் மக்கள் போராட்டமாக மாறவேண்டும்’’ என்று தெரிவித்தார்.
அவர் மேலும், ‘’2006 ம் ஆண்டிலெயே மத்திய அரசு இந்த சட்டத்தை நிறைவேற்ற உத்தரவு வழங்கிவிட்டது. அந்த உத்தரவு தமிழக அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுவிட்டது.
ஆனால் இன்னமும் அந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பது வேதனை.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும் இன்னாள் முதலமைச்சர் கருணாநிதியும் இது சம்பந்தமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதுமட்டுமல்ல, தமிழையும், தமிழக மக்களையும் உயர்த்த இவர்கள் இருவரும் எதுவும் செய்யவில்லை.பெயர்ப்பலைகைகளை தமிழில் மாற்ற எடுத்து வரும் நடவடிக்கை எல்லாம் வெறும் கண் துடைப்புதான்.
செம்மொழி மாநாட்டிற்கு இந்தியாவின் முதல் குடிமகள் வருகிறார். அவர் மூலமாக மாநாட்டிலேயே இதற்கான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். மாநாட்டிலேயே உயர்நீதிமன்றத்தில் தமிழில் வழக்காட அனுமதி அளிக்கப்படவேண்டும். அதற்காக தமிழர்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்’’என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.