பக்கங்கள்

23 ஜூன் 2010

ஐ.நா.நிபுணர் குழு அமைப்பு,மகிந்த குழப்பம்!



ஐக்கிய நாடுகள் சபை நேற்று மாலை குழு அமைத்துவிட்டதாக அறிவித்தமையினாலும், ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி. பிளஸ் வழங்குவதற்கு முன்னர் இணக்கம் தெரிவித்த பின்னர் தற்போது எழுத்து மூல நிபந்தனைகளை விதித்துள்ளமையினாலும் மஹிந்த கடும் கோபத்திற்குள்ளாகியுள்ளார்.
இதனால் இரவோடு இரவாகவே தனது மாளிகைக்கு வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அவர்களை அழைத்து மஹிந்த தனது கோபத்தை தெரியப்படுத்தியுள்ளதுடன் இரவிரவாக மந்திராலோசனையும் நடாத்தியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த மாற்றத்திற்கு காரணம் என்ன? நீங்கள் ஐரோப்பிய ஒன்றியம் சலுகையினை நீடிக்கப்போவதென்று சொல்கின்றீர்கள். ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனைகளை விதிக்கின்றது. இந்த மாற்றம் ஏன்? என பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற குழுவிற்கு தலைமை தாங்கிய வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் அவர்களை மஹிந்தவும் சில மூத்த அமைச்சர்களும் குடைந்த வண்ணம் உள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் மீண்டும் பேச குழு ஒன்றை அனுப்புவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் பான் கி மூன் நியமித்த மூவர் கொண்ட குழு உறுப்பினர்களை கொண்ட நாடுகளுடன் உடனடியாக பேசுவது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.