பக்கங்கள்

11 ஜூன் 2010

பார்வதி அம்மா மகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெறலாம்,ஆனால் அரசியல்வாதிகள் சந்திக்கக் கூடாதாம்!


தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் தமிழகத்தில் அவரது மகளின் வீட்டில் தங்கவும், உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்திக்கவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழக அரசு இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பார்வதி அம்மாள் தமிழகத்தில் சிகிச்சை பெற வேண்டுமானால், மருத்துவமனையில் மட்டுமே தங்கியிருக்க வேண்டும் என்று மத்திய அரசு நிபந்தனை விதித்திருந்தது. இதன் பின்னர் பார்வதி அம்மாள் சென்னை வராமல் இலங்கை சென்று விட்டார். அவர் தனது மகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெற விரும்புகிறார் என்பது தெரிய வந்தது. எனவே நிபந்தனைகளை தளர்த்தலாமா என்று கடந்த மாதம் 18ஆம் தேதி தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியது. அதற்கு பார்வதி அம்மாள் தமது மகள் வீட்டில் தங்கியிருக்க ஆட்சேபனை இல்லை என்று தமிழக அரசு தெரிவித்தது.
இதையடுத்து இலங்கையில் உள்ள இந்திய தூதர் மற்றும் தமிழக அரசுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ள புதிய கடிதம் ஒன்றில், பார்வதி அம்மாள் தமது மகள் வீட்டில் தங்கலாம். நண்பர்கள், உறவினர்கள் சந்திக்கலாம். ஆனால் அரசியல் கட்சியினர், தடை செய்யப்பட்ட இயக்கத்தினர் சந்திக்க கூடாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில் பார்வதி அம்மாள் நிலை அறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.