பக்கங்கள்

01 ஜூலை 2010

என் மீது அபாண்டமான குற்றச்சாட்டு,டக்ளஸ் மீது வழக்கு தொடரவுள்ளேன்.-விஜயகலா.



யாழ்ப்பாணத்தில், நல்லூரில் நிறுவப்பட்டிருந்த தியாகி திலீபனின் சிலையை, சிங்களக் காடையர்களைக் கொழும்பில் இருந்து கூட்டிச்சென்று நானே இடிப்பித்ததாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொய்ப்பிரச்சாரம் செய்து வருகிறார். என்று திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நேற்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவுசெலவுத்திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் திருமதி மகேஸ்வரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் இது தொடர்பாக மேலும் கூறியுள்ளதாவது:-
வெளிநாடுகளில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சிகளுக்குப் பேட்டிகள் வழங்கி அவர் என் மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளார்.
அந்தப் பேட்டி யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் வெளிநாட்டுத் தொலைக்காட்சியிலிருந்து மறுஒளிபரப்புச் செய்யப்பட்டிருக்கிறது.
அவர் என் மீதான இந்த அபாண்டமான பழியை வெளிநாட்டு ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.
அவர் மீது நூறு மில்லியன் ரூபா மான நஷ்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்ய உள்ளேன் என்பதனை இந்தச் சபையில் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் விஜயகலா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.