பக்கங்கள்

08 ஜூன் 2010

நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கைது!


இலங்கை அதிபர் ராஜபக்சே மூன்று நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வரும் பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னை சாஸ்திரி பவன் முன்பு நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அவ்வியக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்றார்.
ஆர்ப்பாட்டத்தின் போது, ராஜபக்சேவுக்கு வரவேற்பு தரும் இந்திய அரசை கண்டித்து ஆவேசமாக கத்தினார்.
இதையடுத்து சீமானை போலீசார் கைது செய்தனர். அவருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் அத்துனை பேரையும் கைது செய்தனர் போலீசார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.