பக்கங்கள்

26 ஜூன் 2010

சித்திரவதைக்கு ஆளானோரின் சர்வதேச ஆதரவு தினம்.


சித்திரவதைக்கு ஆளானோரின் சர்வதேச ஆதரவு தினம் இன்று உலகம் முழுவதும் அனுஷ்டிக்கப்படுகிறது. உலகலாவிய ரீதியில் உள, உடல் ரீதியாக பல்வேறு சித்திரவதைக்கு ஆளானோருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வருடாந்தம் ஜூன் 26ஆம் திகதி இன்றைய நினைவு தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.1987ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் திகதி, ஐக்கிய நாடுகள் சபை சித்திரவதைக்கு எதிராக தீர்மானம் எடுத்திருந்தது. அதனை நினைவுகூரும் பொருட்டே இன்றைய தினம் பிரகடனப்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.மனித சமூகத்தின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுவதன் மூலமே உலகில் விடுதலை, நீதி மற்றும் அமைதி ஏற்பட வாய்ப்புண்டு என்பதை ஐ.நாவின் இந்தத் தீர்மானம் எடுத்துக் காட்டுகின்றது.அதேவேளை, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் உலகம் முழுவதிலுமுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.