பக்கங்கள்

15 ஜூன் 2010

வவுனியாவில் இராணுவ வாகனம் மோதி தாயும் மகனும் பலி!


வவுனியா வைத்தியசாலைக்கு முன்பு இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் தாயும் மகனும் பலியாகி உள்ளனர்.மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த தாயும், அவரது 7 வயது மகனும் பின்னால் வந்த இராணுவ ட்ரக் வண்டி ஒன்று மோதியதால் இருவரும் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சைக்கிளில் சென்ற 35 வயதுடைய பிரேமளாதேவி சிவநேசன், அவரது 7 வயது மகனாகிய சிவநேசன் சஞ்சயன் ஆகியோரே இவ் விபத்தில் பலியாகி உள்ளனர்.இராணுவ ட்ரக் வண்டியே விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்ற போதிலும்,பேரூந்தே மோதியதாக படையினர் தெரிவித்ததாகவும் எனினும் இரண்டு வாகனங்களையும் பொலிஸார் கொண்டு சென்றதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.