பக்கங்கள்

12 ஜூன் 2010

நித்தியானந்தா சிறையிலிருந்து வெளியே வந்தார்.


52 நாள் சிறைவாசதத்துக்குப் பின்னர் வெளியே வந்தார் நித்யானந்தா.
நித்யானந்தா, நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியது. இதையடுத்து அவர் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டது.
மத உணர்வுகளை புண்படுத்துதல் மற்றும் மோசடி போன்ற பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதனால் 50 நாள் தலைமறைவாக இருந்த நித்யானந்தாவை, பெங்களூர் சிஐடி போலீசார் இமாசலபிரதேசத்தில் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி கைது செய்தனர். பின்னர் அவர் ராம்நகரில் உள்ள பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
நித்யானந்தாவை ஜாமீனில் விடுவிக்கக் கோரி, கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஜாமீன் மனு மீதான விசாரணை முடிவடைந்து 11.06.2010 அன்று தீர்ப்பு கூறப்பட்டது. நித்யானந்தாவுக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கி, நீதிபதி சுபாஷ் ஆதி உத்தரவிட்டார்.
இதையடுத்து 52 நாட்களாக ராம்நகர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நித்யானந்தா இன்று வெளியே வந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.