பக்கங்கள்

14 ஜூன் 2010

விசுவமடுவில் பாலியல் பலாத்காரம் புரிந்த சிங்கள சிப்பாய்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


விசுவமடு ரெட்பானா பகுதியில் கடந்த 2 ஆம் திகதி நள்ளிரவு வீடொன்றினுள் புகுந்த இராணுவத்தினர் அங்கிருந்த இரண்டு பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பான வழக்கில் நான்கு இராணுவத்தினர் அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் நீதவான் சிவகுமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.விசுவமடு ரெட்பானா பகுதியில் கடந்த 2 ஆம் திகதி நள்ளிரவு வீடொன்றினுள் புகுந்த இராணுவத்தினர் அங்கிருந்த இரண்டு பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் இருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகத்தின் பேரில் 6 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டிருந்;தார்கள். இன்று கிளிநொச்சி நீதிமன்றத்தில் இந் ஆறு இராணுவத்தினரோடு 30 பேர் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தியபோது, பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களும், சம்பவ நேரத்தில் வீட்டில் இருந்த ஏனைய சாட்சிகளும் எதிரிகளை அடையாளம் காட்டியுள்ளனர். இதனையடுத்து அடையாளம் காணப்பட்ட 4 பேர் மேலும் 14 நாட்களுக்கு நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.