பக்கங்கள்

28 ஜூன் 2010

ஐ.நா.நிபுணர்குழு நியூ யோர்க்கில் கூடுகிறது.


ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்துள்ள ஆலோசனைக் குழு முதல் தடவையாக இன்று நியூயோர்க்கில் கூடுகிறது என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அந்தச் செய்தியில், "இந்தோனேஷியாவின் முன்னாள் சட்ட மா அதிபர் டருஷ்மன் தலைமையில் இந்தக் குழு இன்று முதல் தடவையாகக் கூடவுள்ளது. குழுவின் அமர்வுகள் தொடர்பில் எந்தவிதமாக கருத்துக்களும் ஊடகங்களுக்கு வெளியிடப்பட மாட்டாது என ஐக்கிய நாடுகள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திடமும், தமிழீழ விடுதலைப் புலிகளிடமும் தகவல்கள் திரட்டப்பட உள்ளதாக ஆலோசனைக் குழு அறிவித்துள்ளது. எனினும், தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றிய தகவல்களை யாரிடம் பெற்றுக்கொள்வது என்பது தொடர்பில் கருத்து எதுவும் வெளியிடப்படவில்லை" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.