பக்கங்கள்

15 ஜூன் 2010

சீபா குறித்த விமர்சனங்கள் வெறும் அச்ச மனோபாவத்தால் ஏற்பட்டவை என்கிறார் கெஹலிய.


'சீபா' தொடர்பாக இலங்கைக்குள் அச்ச மனோபாவம் ஏற்பட்டுள்ளது. அதனால் சீபா பற்றி எதிர்ப்பு தெரிவிப்போர் அது என்னவென்று அறியாதவர்களே என்று ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். 'சீபா' என்ற பரந்துபட்ட பொருளாதார பங்குடைமை உடன்பாடு தொடர்பான எதிர்க்கட்சியினரின் விமர்சனங்கள் வெறுமனே அச்ச மனோபாவத்தில் மேற்கொள்ளப்பட்டவை என்றும் அமைச்சர் கூறினார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் அண்மையில் இந்தியா சென்ற தூதுக் குழுவில் ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவும் இடம்பெற்றிருந்தார். இணையத்தளமொன்றுக்கு வழங்கிய பேட்டியொன்றில், "உத்தேச உடன்படிக்கை இந்தியாவுடன் தற்போது அமுலில் உள்ள சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மேலும் அபிவிருத்தி செய்வதாக அமையும். இந்தியாவுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை இலங்கை 10 வருடங்களுக்கு முன் செய்து கொண்டது. எனினும் காலம் செல்லச் செல்ல உடன்படிக்கையை மேலும் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்களும் இடைஞ்சல்களும் இருப்பதை இரு தரப்பினரும் உணர்ந்தனர். 10 வருடஇடைவெளி, அதனை காலம் கடந்த ஒன்றாகக் கருத வைத்து விட்டது.சீபாவுக்கு எதிரான விமர்சனங்கள் அடிப்படையற்றவை. எவ்வாறான குறைகள் இருந்திருந்தாலும் அவை அமைச்சரவையின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டிருக்கும். ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. அதில் குறை இருந்தால், எவரும் அதில் கைச்சாத்திட்டிருக்க மாட்டார்கள்.பொருளாதார கூட்டுறவுக்கான இரு தரப்பு உடன்படிக்கைகள் மூலம் சாதகங்களைப் பெறும் நோக்கிலேயே நாடுகள் இவற்றில் கைச்சாத்திடுகின்றன. அது எப்போதுமே ஒரு தரப்புக்கு மட்டும் சார்பாக அமையாது. விட்டுக் கொடுக்கும் கொள்கையுடனேயே அமையும். இரு தரப்பு உடன்படிக்கைகள் தொடர்பான இந்த பொதுவான நிலையை, சீபாவை எதிர்ப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்"என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.