பக்கங்கள்

26 ஜூன் 2010

நயினை நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் திருடிய பெண்கள்.


நயினை நாகபூசணி அம்மன் கோவிலின் தேர்த் திருவிழா நேற்று வெள்ளிக்கிழமை கோலாகலமாக இடம்பெற்றுள்ளது. குடாநாட்டில் பல பாகங்களிலும் இருந்து திரண்ட ஏராளமான பக்தர்கள் இடையே திருட்டுக் கும்பல்களும் தமது கைவரிசையைக் காண்பித்துள்ளன. நேற்றைய திருவிழாவின் பல பெண்களின் தாலிக்கொடிகள், சங்கிலிகள், காப்புகள் போன்ற தங்க ஆபரணங்கள் களவு போயுள்ளன. பெண்ணொருவர் போட்டிருந்த தாலிக்கொடியை அபகரிக்க முயன்ற பெண்ணொருவர் கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளார்.இவரிடம் விசாரணை செய்தபோது திருடுவதற்கென்றே கோவிலுக்கு வந்த மேலும் நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஐந்து பெண்களும் நவநாகரீக உடையில் கோயிலைச் சுற்றிவந்துள்ளமை தெரியவந்துள்ளது. தற்போது இவர்கள் அனைவரும் மேலதிக விசாரணைகளுக்காக குறிகட்டுவானில் அமைக்கப்பட்டுள்ள போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை போலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.