பக்கங்கள்

18 ஜூன் 2010

கல்லடி சாந்தி திரையரங்கிற்கு இனந்தெரியாதோர் தீ வைப்பு!


மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியிலுள்ள பிரபல சினிமா திரையரங்குக்கு இனந்தெரியாத நபர்கள் தீ வைத்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கல்லடி சாந்தி திரையரங்குக்கே இவ்வாறு தீயிடப்பட்டுள்ளதாகவும், இச் சம்பவம் இன்று அதிகாலை 12 மணியளவில் இடம்பெற்றிருக்கலாமென நம்பப்படுகின்றது.இலங்கையில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட்ட விருது வழங்கும் விழாவில் இந்நிய திரைப்பட தமிழ் நடிகர்கள் கலந்துக் கொள்ளாததைக் கண்டித்து துண்டு பிரசுரம் 'சுதந்திர இலங்கையின் தமிழர்கள்" என்ற அமைப்பினரால் வெளியிடப்பட்டுள்து.இந்த பிரசுரத்தில் இன்று முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை இந்திய திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிடுவதைத் தவிர்க்குமாறு குறிப்பிடப்படடுள்ளது.இந்நிலையில் கல்லடியில் உள்ள சாந்தி தியட்டருக்கு இனந் தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.