பக்கங்கள்

26 ஜூன் 2010

கே.பியின் ஏற்பாட்டில் இலங்கை சென்று திரும்பியோர் விபரம் வெளியாகியுள்ளது.



புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து அண்மையில் குமரன் பத்மநாதனின் ஏற்பாட்டில் இலங்கைக்கு விஜயம் செய்த குழுவினர்களின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன
புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து இலங்கைக்கு விஜயம் செய்து குழுவினர்கள் இலங்கை ஜனாதிபதியைச் சந்தித்து உரையாடியுள்ளனர். இதன் போது வடகிழக்கு அபிவிருத்தி தொடர்பாக அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது
இக்குழுவில்,
1. மருத்துவ கலாநிதி ரூபமூர்த்தி அவுஸ்திரேலியா
2. திருமதி சந்திரா மோகன் ராஜ் சுவிற்சலாந்து
3. சிறிபதி சிவனடியார் யேர்மனி
4. பேரின்பநாயகம் கனடா
5. விமலதாஸ் பிரித்தானியா
6. சார்ல்ஸ் பிரித்தானியா
7. மருத்துவர் அருணகுமார் பிரித்தானியா
8. கங்காதரன் பிரான்ஸ்
9. சிவசக்தி கனடா
ஆகியோரே இக்குழுவில் அங்கம் வகித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இக்குழுவினர்களின் சந்திப்புக்கான ஒழுங்குகளை இலங்கை அரசினால் கைது செய்யபட்டு தடுத்து வைக்கபட்டுள்ள புலிகளின் சர்வேதேச பொறுப்பாளர் கே.பி என்று அழைக்கபடும் செல்வராசா பத்மநாதனால் ஒழுங்கு செய்யப்பட்டதாக கொழும்பில் உள்ள இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.