பக்கங்கள்

25 ஜூன் 2010

உலகத்தமிழர் நெஞ்சில் அழியாத சித்திரமாக பிரபாகரன் தீட்டப்பட்டுள்ளார்.


இலங்கையில் பிரபாகரன் தலைமையில் மீண்டும் களம் அமையும் என்று பழனியில் நடைபெற்ற திருமண விழாவில் ம.தி. மு.க. பொதுச் செயலாளர் வைகோ பேசியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஆயக்குடி பேரூர் ம.தி.மு.க. செயலாளர் செல்வத்தின் மகன் திருமணத்தை கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ நேற்று நடத்தி வைத்து பேசியபோதே இவ்வாறு கூறினார். மேலும், உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் நெஞ்சில் அழியாத சித்திரமாக பிரபாகரன் தீட்டி வைக்கப்பட்டுள்ளார். இன்று உலகத் தமிழர்களின் நெஞ்சில் அமைதி இல்லை. மகிழ்ச்சி இல்லை. துன்பப் புயல் வீசி வருகிறது.இந்திய அரசு இலங்கை அரசுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பணம் மற்றும் ஆயுத உதவி செய்தது. ஆயிரக்கணக்கான நமது தொப்புள் கொடி உறவுகள் அழிக்கப்பட்டனர். ஈழ போராட்டத்திற்கு எதிராக 7 வல்லரசு நாடுகள் செயல்பட்டன. அரசியல் துரோகம் செய்து இருக்கலாம். களங்கள் முடிந்து விடவில்லை. லட்சியங்கள் தோற்பதில்லை. ஈழத்தமிழர் களுக்கு ஒரு விடியல் பிறக்கத் தான் போகிறது. ஈழத்தமிழர்கள் சிந்திய ரத்தம், செய்த தியாகம் வீண் போகாது. தரணியெங்கும் வாழும் தமிழர்கள் கிளர்ந்தெழுவர். இலங்கையில் பிரபாகரன் தலைமையில் மீண்டும் களம் அமையும் என்று பேசியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.