பக்கங்கள்

11 ஜூன் 2010

நெல்சன் மண்டேலாவின் பேத்தி கார் விபத்தில் மரணம்!


முன்னாள் தென்னாபிரிக்கா ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் பேத்தி இன்று இடம்பெற்ற கார் விபத்து ஒன்றில் மரணமாகியுள்ளார் என அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. 13 வயதான செனானி மண்டேலா என்பவரே இவ்வாறு மரணமானார். இவர் நெல்சன் மண்டேலா-வின்னி மண்டேலாவின் புதல்வியான ஸிண்ட்ஸி மண்டேலாவின் புதல்வியாவார். தென்னாபிரிக்காவில் ஆரம்பமாக இருக்கும் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகளின் நேற்றைய ஆரம்ப நாள் நிகழ்வில் கலந்து கொண்டு திரும்புகையிலேயே செனானி பயணித்த கார் விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. விபத்தில் இவர் மரணமான தகவலை நெல்சன் மண்டேலா ஸ்தாபனம் உறுதிபடுத்தியுள்ளது.செனானியின் காரை ஓட்டிச்சென்ற சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து குறித்த மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக தென்னாபிரிக்க பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். செஷானி கடந்த இரு தினங்களுக்கு முன் தனது பிறந்த நாளைக் கொண்டாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.