பக்கங்கள்

24 ஜூன் 2010

தென்னிந்திய திரைப்பட சங்கத்தின் எச்சரிக்கையையும் மீறி அசின் கொழும்பு சென்றார்!


தமிழ் திரையுலகின் கடுமையான எதிர்ப்பையும் மீறி கொழும்பில் நடைபெற்ற பன்னாட்டு இந்திய திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகர் சல்மான் கான், தற்பொழுது தனது ‘றெடி’ திரைப்படத்திற்கான படப்பிடிப்பிற்கு மீண்டும் கொழும்பு சென்றுள்ளார்.
சல்மான் கானுடன் இந்தத் திரைப்படத்தில் நடிக்கும் நடிகை அசின் கொழும்பு செல்லக்கூடாது என தென்னிந்திய திரைத்துறையினர் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தும், தமிழ் மக்களையும், தமிழ் திரையுலகையும் மதிக்காது அசினும் கொழும்பு சென்றுள்ளார்.
‘அசின் போனால் அப்படியே போகட்டும்’ என தென்னிந்திய நடிகர் சங்க செயலர் ராதரவி எச்சரிக்கை செய்திருப்பது, அவரது திரைப்படங்களும் தமிழ்நாட்டில் புறக்கணிக்கப்படும் என்ற எச்சரிக்கையாகவே பார்க்க முடிகின்றது.
கொழும்பில் நடைபெற்ற பன்னாட்டு இந்திய திரைப்பட விழாவில் கலந்துகொண்ட கிரித்திக் றோசனின் கைட்ஸ் திரைப்படம் தமிழ்நாட்டில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
‘றெடி’ திரைப்படத்திற்கான படப்பிடிப்பை மொறீசியசில் நடத்த முன்னர் முடிவு செய்யப்பட்டிருந்த போதிலும், கொழும்பு சென்று திரும்பிய சல்மான் கான், சிறீலங்கா அரசு கொடுத்த வரவேற்பிலும், வேறு விடயங்களிலும் மயங்கி படப்பிடிப்பை மாற்றியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.