பக்கங்கள்

27 ஜூன் 2010

ஐ.நாவின் நிபுணர் குழுவுக்கு பிரான்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.


ஐக்கிய நாடுகள் சபையினால் நியமிக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பிலான நிபுணர்கள் குழுவுக்கு அமெரிக்கா, நோர்வே ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், பிரான்ஸ் நாடும் தனது வரவேற்பை தெரிவித்துள்ளது. இந்த குழு, இலங்கையில் நடைபெற்ற சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள், வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் விசாரணை செய்ய வேண்டும் என பிரான்ஸ் கோரியுள்ளது.
பிரான்ஸின் வெளியுறவு கொள்கைகள் தொடர்பிலான உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ஏற்கனவே யுத்தம் நிறைவடைந்தவுடன் யுத்த மீறல்கள் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதாக இலங்கை அரசாங்கம் உறுதியளித்திருந்தது. இதன் படி, அண்மையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட மாண்புமிக்கோர் குழுவும், ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழுவுடன் இணைந்து இது தொடர்பில் செயல்பட வேண்டும் என பிரான்ஸ் கோரியுள்ளது.
இலங்கையில் யுத்தக் குற்றசாட்டுகள் மற்றும் மனித உரிமை மீறல்கள், தொடர்பான விசாரணைகள், முடிக்கப்படாமல் தொக்கி நிற்கவிட கூடாது. எனவே இதனை நிறைவு செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.இதன் அடிப்படையிலேயே, இலங்கையின் எதிர்கால சந்ததியினரின் நிம்மதியான வாழ்கை இருக்கும் என பிரான்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.