பக்கங்கள்

14 ஜூன் 2010

கிழக்கில் ஆழிப்பேரலை ஏற்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றது!



எதிர்வரும் காலங்களில் கிழக்கில் ஆழிப் பேரலை அனர்த்தம் ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக பேராசிரியர் வில்பட் கெஹல்பன்னல தெரிவித்துள்ளார்.
நிக்கோபர் அந்தமான் தீவுகளுக்கு இடையிலான இந்து சமுத்திர நிலத்தட்டில் விலகல் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் நாட்களில் 8 முதல் 8.5 ரிச்டர் அளவிலான நில நடுக்கங்கள் ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஓர் நில அதிர்வு ஏற்பட்டால் அது இலங்கையின் கிழக்கு கரைப் பகுதியில் அனர்த்தங்களை ஏற்படுத்தக் கூடுமென சிரேஸ்ட பூவியியல் பேராசிரியர் கெஹல்பன்னல தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் நிலஅதிர்வு ஏற்பட்ட பிரதேசத்தில் பாரிய நில அதிர்வு ஏற்படும் என தாம் ஏற்கனவே எதிர்வு கூறியிருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.