பக்கங்கள்

28 ஜூன் 2010

தமிழீழம் பெற்று தருவது குறித்து தீர்மானம் நிறைவேற்றாதது ஏன்?-விஜயகாந்த்.


தமிழ் ஈழத்தை பெற்று தருவது குறித்து செம்மொழி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றாதது ஏன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க சட்டம் கொண்டு வரப்படும் என்று உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது வரவேற்கத்தக்கது. அதேசமயம் அரசு பணிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு வருவதோடு, அரசு ஆலைகள் பங்குகள் தனியாருக்கு விற்கப்படுகின்றன.
எனவே தமிழில் படித்தவர்களுக்கு தனியார் துறையிலும் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், அரசு கொண்டு வரும் சட்டம் அமைய வேண்டும்.
இலங்கை தமிழர்களுக்கு தமிழ் ஈழத்தை பெற்று தருவது குறித்து செம்மொழி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றாதது ஏன் என்று விஜயகாந்த் தனது அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.