பக்கங்கள்

18 ஜூன் 2014

மிருகபலிக்கு கூட்டமைப்பு ஆதரவா?

யாழ். கவணாவத்தையில் உள்ள நரசிங்க வைரவர் ஆலயத்தில் பாரம்பரிய வேள்வி என்கிற பெயரில் நடத்தப்பட்டு வருகின்ற மிருக பலிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கி வருகின்றது. இக்கொலை நிகழ்வை மிருக பலித் திருவிழா என்று தமிழ் தேசிய கூட்டமைப்புக்காரர்கள் அழகு தமிழில் அழைக்கின்றனர். தமிழ் தேசிய கூட்டமைப்புக்காரர்கள் நினைத்து இருந்தால் இம்மிருக பலியை இம்முறையேனும் தடுத்து நிறுத்தி இருக்க முடியும். ஏனென்றால் வலிகாமம் வடக்கு பிரதேச சபை தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளது. இப்பிரதேச சபை அனுமதிக்கின்ற பட்சத்தில்தான் கோவிலை தற்காலிகமாக கொல்களமாக பயன்படுத்த முடியும். ஆனால் இப்பிரதேச சபையின் தவிசாளர் எஸ். சுகிர்தன் ஆலயத்தை தற்காலிக கொல்களமாக பயன்படுத்த அனுமதி வழங்கினார். இவருக்கு இதற்காக விசேட கவனிப்புக்கள் ஆலய நிர்வாகத்தால் செய்து கொடுக்கப்பட்டன. இவரது அனுமதிக் கடிதம் இத்துடன் இணைக்கப்படுகின்றது.நன்றி:new jaffna 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.