பக்கங்கள்

25 ஜூன் 2014

கனடாவில் இளம்குடும்பஸ்தர் குத்திக்கொலை!

கனடா மொன்றியலில் நேற்றையதினம் மாலை தமிழர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். மேற்படி கொலை 7745 Mountain Sights எனும் இடத்தில் அவரது வீட்டிற்கு பக்கத்தில் நடைபெற்றதாக அறியப்படுகிறது. ஜெயராசன் மாணிக்கராஜா (40) எனும் இளம் குடும்பஸ்தரான இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார் . அவரது நண்பர்களில் ஒருவராக உள்ள அவரது ஊரை சேர்ந்த நபரே இக் கொலையை செய்ததாக காவல்துறையினர் சந்தேகத்தின் பெயரில் ஒருவரைக் கைது செய்துள்ளார்கள் . ஜெயராசன் மாணிக்கராஜா அவர்கள் மொன்றியலில் 2000 ஆம் ஆண்டு குடியேறியதிலிருந்து ஒரு சிறந்த சமூக சேவையாளராகவும் ஆலயத்தொண்டு மற்றும் விளையாட்டுக்களில் அதிக ஈடுபாடு கொண்டவராகவும் விளங்கினார் என தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.