பக்கங்கள்

20 ஜூன் 2014

மாணவி மீது பாலியல் வல்லுறவு!படையினன் கைது!

மூளை வளர்ச்சி குறைந்த 15 வயதான பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் இராணுவத்தின் பொறியியல் படைப் பிரிவின் வீரர் கைது செய்யப்பட்டுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் இன்று அதிகாலை 1.30 அளவில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பாணந்துறை நல்துர பிரதேசத்தில் உள்ள இராணுவ பொறியியல் படைப் பிரிவின் முகாமில் பணியாற்றி வந்துள்ளார். முந்தல் பொலிஸ் பிரிவின் நவதன்குளம் – விசேனைக்கட்டு பிரதேசத்தில் நேற்று மாலை 4.30 அளவில் சந்தேக நபர் மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தல் – நவதன்குளம் பிரதேசத்தில் வசித்து வரும் போரில் அங்கவீனமுற்ற இராணுவ வீரரின் வீடொன்றை நிர்மாணிக்கும் பணியில் ஈடுபடுவதற்காக சந்தேக நபர் பிரதேசத்திற்கு சென்றிருந்தார். பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட மாணவி மருத்துவப் பரிசோதனைக்காக முந்தல் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் இன்று புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார். முந்தல் பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.