பக்கங்கள்

08 ஜூன் 2014

யாழ். நெடுந்தீவில் நேற்றிரவு 32 இந்திய மீனவர்கள் கைது!

யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் 32 பேர் இலங்கைக் கடற்படையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இரவு மீன்பிடிப்பதற்காக 8 படகுகளில் வந்த 32 மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் யாழ்ப்பாணம் நீரியல் வள துறையினரிடம் கேட்டபோது, கைது செய்யப்பட்டவர்களை தற்போது கடற்பரப்பில் இருந்து காங்கேசன்துறைக்கு கடற்படையினர் கொண்டு வருவதாக அறிவித்துள்ளனர். எனவே நண்பகல் அளவில் அனைவரையும் பொறுப்பேற்கவுள்ளதாகவும் யாழ். மாவட்ட நீரியல் வள திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் கணேசமூர்த்தி தெரிவித்தார். இதேவேளை, நேற்று சனிக்கிழமை மாலை தலைமன்னார் கடற்பரப்பில் 8 படகுகளில் வந்த 42பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் நேற்று முன்தினம் எல்லை தாண்டிச் சென்றனர் என்ற குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் 12பேர் இந்திய கடலோர காவற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.