பக்கங்கள்

07 ஜூன் 2014

யாழ்,பல்கலைகழக மாணவியின் சங்கிலியறுப்பு!

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் கல்வி பயலும் மாணவியொருவரின் சங்கிலியை திருடர்கள் அறுத்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர். இவர்கள் வந்த மோட்டார்சைக்கிள் மாணவியின் துவிச்சக்கர வண்டியுடன் சிக்கியதால், அதனை போட்டுவிட்டு ஓடித்தப்பிவிட்டனர். கொக்குவில் பிரம்படி வீதியில் நேற்று முன்தினம் இந்த சம்பவம் நடந்தது. மாணவி சைக்கிளில் சென்று கொண்டிருந்த சமயம் பின்பக்கமாக வந்தவர்கள் சங்கிலியை அறுத்துள்ளனர். மாணவியும் சங்கிலியை பிடித்துவிட்டார். இதனால் சங்கிலியின் ஒரு பகுதி மாணவியிடம் போக எஞ்சியது திருடர்களின் கைக்கு போனது. இந்த இழுபறியில் திருடர்களின் மோட்டார் சைக்கிளிலும் மாணவியின் துவிச்சக்கரவண்டியும் சிக்கிக் கொண்டன. வேறு வழியில்லாமல் களவாணிகள் இருவரும் மோட்டார்சைக்கிளை போட்டுவிட்டு ஓடித்தப்பிவிட்டனர். விடயம் காவல்த்துறைக்கு அறிவிக்கப்பட்டது. அவர்கள் மோட்டார் சைக்கிளை மீட்டு ஆய்வு செய்தபோது அது நல்லூரில் திருட்டுபோன மோட்டார் சைக்கிள் என்பது தெரிய வந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.