பக்கங்கள்

04 ஜூன் 2014

இந்தியரை நம்பக்கூடாது என பொங்கினாராம் மகிந்த!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச சந்திப்பு பற்றி சிங்களப் பத்திரிகைகள், இணையதளங்கள் வெளியிட்டுள்ள செய்தியை ஜூனியர் விகடன் சுட்டிக்காட்டியுள்ளது. அதில், மோடியை சந்தித்து விட்டு இலங்கை திரும்பிய ராஜபக்ச வெறுப்பின் உச்சத்தில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.ஏதோ என்னை நட்பு ரீதியாகத்தான் அழைத்தார் என்று நினைத்தேன். ஆனால், அவர் என்னை மரியாதையாக நடத்தவில்லை.இதற்கு முன்னால் இருந்த ஆட்சியாளர்கள் எவ்வளவோ பரவாயில்லை. முதல் சந்திப்பிலேயே நம்மை இப்படி நடத்துகிறார் என்றால், ஒரு வருடத்தில் நம்மை இருக்கும் இடம் தெரியாமல் இவர் செய்துவிடுவார்.எந்த இந்தியரையும் நாம் நம்பக் கூடாது என்று பொருமினாராம் ராஜபக்ச என்று சொல்லப்பட்டு உள்ளது.இவ்வாறு ஜூனியர் விகடன் மிஸ்டர் கழுகு பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.