வடக்கு,கிழக்கில் 40 வீதமான பெண்கள் தொடர்ந்தும் பாதுகாப்பற்ற நிலைமையை உணர்வதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது. பிரித்தானிய உயர்ஸ்தானிகராலய அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் பிரதிநிதி அலியான் சிபனலே இதனைத் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு இராணுவ மயப்படுத்தப்பட்டிருப்பதனால் பெண்கள் பாதுகாப்பற்ற நிலைமையை உணர்வதாகத் தெரிவித்துள்ளார். மேலும் குறிப்பாக போர் நிறைவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் இவ்வாறான ஓர் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.